உள்ளூர் செய்திகள்

அன்பழகன் நினைவு தினம் அனுசரிப்பு

Published On 2023-03-08 10:23 GMT   |   Update On 2023-03-08 10:23 GMT
  • பொ.மல்லாபுரம் பேரூர் கழக செயலாளர் கெளதமன் தலைமை வகித்தார்
  • அன்பழகனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் தி.மு.க முன்ணனி தலைவரான மறைந்த போராசிரியர் அன்பழகன் நினைவு நாள் அனுசரிக்கபட்டது,

இந்நிகழ்ச்சியில் பொ.மல்லாபுரம் பேரூர் கழக செயலாளர் கெளதமன் தலைமை வகித்தார். பொ.மல்லாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் சாந்தி புஷ்பராஜ் முன்னிலையில், ஒன்றிய கழக செயலாளர் சரவணன் அன்பழகனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், நிர்வாகி கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News