உள்ளூர் செய்திகள்

பகுப்பாய்வு வாகனத்தை கலெக்டர் ஷஜீவனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டத்தில் சாலையோர உணவுகளை ஆய்வு செய்ய பகுப்பாய்வு வாகனம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-08-11 05:17 GMT   |   Update On 2023-08-11 05:17 GMT
  • சாலையோரங்களில் உணவு வகைகள் தயார் செய்வதை உறுதி செய்வதற்காக வரப்பெற்ற நடமாடும் பகுப்பாய்வுக் கூடம் வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கிவைத்தார்.
  • பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உணவு ப்பொருள் குறித்த ஏதேனும் புகார் இருப்பின் மாநில வாடஸ்-அப் புகார் எண்ணிற்கும், நுகர்வோர் புகார் செயலியிலும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

தேனி:

தேனி மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி சாலையோர ங்களில் உணவு வகைகள் தயார் செய்வதை உறுதி செய்வதற்காக வரப்பெற்ற நடமாடும் பகுப்பாய்வுக் கூடம் வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கிவைத்தார்.

தேனி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்து கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருவதை உறுதி செய்வதற்காகவும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவுகள் தரமாக உள்ளதா என பாரிசோதனை மேற்கொள்ள மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும், துரித உணவு விற்பனைக் கடைகள், பள்ளி, மருத்துவமனை, பஸ் நிலையம், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள உணவுப்பொருள் விற்பனைக் கடைகளில் இந்த நடமாடும் வாகனம் சென்று கடைகளில் சமைத்த உணவு பண்டங்களின் மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வுக் கூட வாகனத்தில் சோதனை செய்வதற்காக வரப்பெற்று ள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உணவு ப்பொருள் குறித்த ஏதேனும் புகார் இருப்பின் மாநில வாடஸ்-அப் புகார் எண்ணிற்கும், நுகர்வோர் புகார் செயலியிலும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மதன்குமார், ஜனகர் ஜோதிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News