உள்ளூர் செய்திகள்

வீரவநல்லூர் அருகே புகையிலை பதுக்கி விற்ற முதியவர் கைது

Published On 2023-06-05 09:02 GMT   |   Update On 2023-06-05 09:02 GMT
  • உப்பாத்து காலனி பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • மயிலப்புரத்தை சேர்ந்த காரல் மார்க்ஸ் என்பவர் தான் புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்துள்ளார் என்பது தெரியவந்தது.

நெல்லை:

வீரவநல்லூர் அருகே உள்ள உப்பாத்து காலனி பகுதியில் ஒரு இடத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சுமார் 13 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முக்கூடல் அருகே மயிலப்புரத்தை சேர்ந்த காரல் மார்க்ஸ்(வயது 56) என்பவர் தான் புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்துள்ளார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News