உள்ளூர் செய்திகள்

கேரளாவை சேர்ந்த முதியவர் மயங்கி விழுந்து சாவு

Published On 2023-01-24 14:59 IST   |   Update On 2023-01-24 14:59:00 IST
  • நேற்று முன்தினம் இரவு திருப்பதி- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊர் திரும்பினர்.
  • சோமநாதன் தான் பயணித்த எஸ்.3 முன்பதிவு பெட்டியில் திடீரென மயங்கி விழுந்தார்.

சேலம்:

கேரளா மாநிலம் கொச்சி அருகே மட்டாஞ்சேரியை சேர்ந்தவர் சோமநாதன் (வயது 68). இவர் தனது மகன் சதீஷ் (30) மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். இவர்கள் நேற்று முன்தினம் இரவு திருப்பதி- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊர் திரும்பினர்.

மயங்கி விழுந்தார்.

ரெயில் சேலம் அருகே வந்தபோது, சோமநாதன் தான் பயணித்த எஸ்.3 முன்பதிவு பெட்டியில் திடீரென மயங்கி விழுந்தார். அவரின் உறவினர்கள் இது குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்ததும் டாக்டர்கள், சோமநாதனை பரிசோதித்து பார்த்தனர். அவர், மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். சோமநாதன் உடல், கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வழக்குப்பதிவு

இது குறித்து சேலம் ஜங்சன் ரெயில் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News