உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலி

Published On 2023-06-26 09:06 GMT   |   Update On 2023-06-26 09:06 GMT
  • தனது அண்ணன் மகள் வீட்டு வளைகாப்பு விசேஷத்திற்கு சென்னை யில் இருந்து நேற்று வந்தார்.
  • விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்:

சென்னை தண்டை யார்பேட்டையை சேர்ந்த வர் ரத்தினம் (வயது 65). இவர் சென்னையில் உள்ள பாரில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் விக்கிரவாண்டியில் நடை பெற்ற தனது அண்ணன் மகள் வீட்டு வளைகாப்பு விசேஷத்திற்கு சென்னை யில் இருந்து நேற்று வந்தார். வளைகாப்பு முடித்து மீண்டும் சென்னை செல்ல பஸ் ஏறுவதற்காக விக்கிர வாண்டி சுங்கச்சாவடி பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

விக்கிரவாண்டி தெற்கு புறவழிச்சாலையை கடக்கும் போது சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்தினம் உடல் நசுங்கி உயிரிழந்தார். இது தொடர்பாக புகார் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News