உள்ளூர் செய்திகள்

அம்பேத்கர் நினைவு தினம் கடைபிடிப்பு

Published On 2023-12-07 15:12 IST   |   Update On 2023-12-07 15:12:00 IST
  • தி.மு.க. சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப் பட்டது.
  • தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப் பட்டது. இதையொட்டி கிருஷ்ண கிரி செட்டியம் பட்டியில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், நகர செயலாளர் நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், கவுன்சிலர்கள் பாலாஜி, சக்திவேல், ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட தலைவர் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News