உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் மக்கள் தேசம் பறையர் பேரவை சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

சங்கரன்கோவிலில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

Published On 2023-04-16 08:50 GMT   |   Update On 2023-04-16 08:50 GMT
  • மாவட்ட செயலாளர் தம்பிசேவியர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
  • விழாவில் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் மக்கள் தேசம் பறையர் பேரவை சார்பில் பழைய பஸ் நிலையம் முன்பு டாக்டர் அம்பேத்கர் பிறந்த தின விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தம்பி சேவியர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மூணார் முருகன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் மாரிராஜ், மாவட்ட அமைப்பாளர் டேனியல், மாவட்ட துணைசெயலாளர் சங்கர் ஷா, விழா ஒருங்கி ணைப்பாளர் சுபாஷ், நகர செயலாளர் முத்துக்குமார், நகர தலைவர் சங்கர லிங்கம், நிர்வாகிகள் ராமர், கண்ணன், கரன், கார்த்திக் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமா னவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News