உள்ளூர் செய்திகள்

அம்பையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்: பாதிக்கப்பட்ட வாலிபர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நாளை மீண்டும் ஆஜராக சம்மன்

Published On 2023-08-01 09:17 GMT   |   Update On 2023-08-01 09:17 GMT
  • பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சில இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
  • புகாரின் அடிப்படையில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினர்.

நெல்லை:

அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பல்வீர் சிங், அந்த சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை க்காக அழைத்து வருபவ ர்களின் பற்களை பிடுங்கி யதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படை யில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட தோடு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அப்போதைய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சில இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஒரு சில இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சூர்யா என்ற வாலிபர் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினர்.

மேலும் சூர்யாவுக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்திய நிலையில் தற்போது சூர்யா மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

அதன்படி என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நாளை(புதன்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சூர்யாவுக்கு சம்மன் வழங்கி உள்ளனர். அவர் நேரில் ஆஜராக வரும் பட்சத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இவரது புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News