உள்ளூர் செய்திகள்
சாயர்புரம் போப் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
- சாயர்புரம் போப் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் போப் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சாந்தி பொன்இந்திரா தலைமை தாங்கி பேசினார்.
தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியை ஜெயசுதா வரவேற்றார். தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியை சகாய ஹென்சி ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் ஹேமா நன்றி கூறினார். ஜெயராணி நிறைவு ஜெபம் செய்தார்.