உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரியில் 36 ஆண்டுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு விழா நடந்தது.
- தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றியும், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தியும் வருகின்றனர்.
பெரும்பாறை:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பழவிளையில் செயல்பட்டு வரும் மதுரை நாடார் மகாஜன சங்கத்திற்குட்பட்ட காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரியில் 36 ஆண்டுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு விழா நடந்தது.
விழாவில் 1984-87-ம் ஆண்டுகளில் படித்த 13 பேர் 36 ஆண்டுகளுக்கு பின்பு கொடைக்கானலில் சந்தித்தனர். இதில் முன்னாள் மாணவர்கள் சந்தித்து பேசினர். இவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றியும், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தியும் வருகின்றனர்.
பின்னர் தங்களுடைய அன்பு, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.