உள்ளூர் செய்திகள்

தீண்டாமை கொடுமைக்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்த கலெக்டரிடம், இந்திய கம்யூனிஸ்ட் மனு

Published On 2022-12-06 10:01 GMT   |   Update On 2022-12-06 10:01 GMT
  • இரட்டை குவளை முறை, முடிவெட்ட மறுப்பது உள்ளிட்ட செயல்கள் நடந்து வருகிறது.
  • அனைத்து அரசியல் கட்சியிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமூக நல்லிணக்கத்தையும், அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி தலைமையில் மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் கலியபெருமாள், பாஸ்கர், மாவட்ட குழு உறுப்பினர் சீனி.முருகையன், ஒன்றிய செயலாளர்கள் பூபேஷ்குப்தா, வாசு.இளைய ராஜா, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட துணை செயலாளர் கல்யாணசுந்தரம், சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் அருணாசலம், சமூக ஆர்வலர் ஏகலைவன் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கிளாமங்கலம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரட்டை குவளை முறை, முடிவெட்ட மறுப்பது உள்ளிட்ட செயல்கள் நடந்து வருகிறது.

அந்தக் கிராமத்தில் நிலவி வரும் பதட்ட நிலையை போக்கிட அனைத்து அரசியல் கட்சியினரையும் கூட்டி பேச்சு வார்த்தை நடத்தி சமூக நல்லிணக்கத்தையும், அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

இதேபோல் பட்டுக்கோ ட்டை வேப்பங்காடு பகுதியில் டாஸ்மாக் கடை கொண்டு வருவதை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News