உள்ளூர் செய்திகள்
வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்
- வேளாண் பட்டம் படித்து வரும் மாணவர்கள், ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தை திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
- முசிறி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய வேளாண் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆத்தூர்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இளங்கலை வேளாண் பட்டம் படித்து வரும் மாணவர்கள், ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தை திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இவ்விழாவில் வேளாண் உதவி இயக்குனர் சம்பத்குமார், வேளாண் அலுவலர்கள் ஜானகி, கௌதமன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் பொங்கல் வைத்தனர்.
சமத்துவ பொங்கல் விழாவில் ஆத்தூர் வட்டா
ரத்தில் கிராம தங்கள் பணி திட்டத்தில் பயிலும்
வாணவராயர் வேளாண்மை கல்லூரி, தனலட்சுமி ஸ்ரீனிவாசன், தந்தை ரோவர் மற்றும் முசிறி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய வேளாண் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.