உள்ளூர் செய்திகள்

வாலிபர் மாயம்

Published On 2023-03-22 15:29 IST   |   Update On 2023-03-22 15:29:00 IST
  • பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும கிடைக்கவில்லை.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள குருபரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனிகிருஷ்ணன். இவரது மகன் நவீன் (வயது26).

இந்நிலையில் தனது நிலத்தை விற்று ரூ. 23 லட்சத்தை தன் மகனிடம் கொடுத்துள்ளார். பின்பு கடந்த 13-ம் தேதி பணம் கேட்டுள்ளார்.

அப்பொழுது அவர் அந்தப் பணத்தை தவுஷிக்கிடம் கொடுத்துவிட்டேன் பின்னர் வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதே நாளில் நவீன் வீட்டுக்கு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும கிடைக்கவில்லை.

இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News