தோரணமலை முருகன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா
- இந்த முருகன் கோவிலுக்கு 1100-க்கும் மேற்பட்ட அகன்ற படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
- விழாவின் சிறப்பு அம்சமாக பக்தி இன்னிசை பாடகர் சீர்காழி சிவசிதம்பரத்தின் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் அகஸ்தியர் மற்றும் சித்தர்கள் வழிபட்ட புராண வரலாற்றுச் சிறப்புடைய ஆலயமாகும்.
ஆடிப்பெருக்கு விழா
இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு மலையடி வாரத்தில் உள்ள விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பின்பு மலைமீது குகையில் அமைந்திருக்கும் இந்த முருகன் கோவிலுக்கு 1100-க்கும் மேற்பட்ட அகன்ற படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
மலைமேல் உள்ள கோவிலில் உள்ள முருகனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தத்தங்கள் எடுத்துவரப்பட்டு கீழே உள்ள உற்சவருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.படி பூஜையும் நடைபெற்றது
பக்தி கச்சேரி
விழாவின் சிறப்பு அம்சமாக பக்தி இன்னிசை பாடகர் சீர்காழி சிவசிதம்பரத்தின் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. காலை முதல் நாள் முழுவதும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்தி ருந்தார்.
சீர்காழி சிவசிதம்பரத்தின் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெற்றபோது எடுத்தபடம்