உள்ளூர் செய்திகள்

'கியூட்' நுழைவுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடுதேசிய தேர்வு முகமை தகவல்

Published On 2023-02-26 14:20 IST   |   Update On 2023-02-26 14:20:00 IST
  • மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் ‘கியூட்’ நுழைவுத்தேர்வு கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
  • இந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை மேற்கொள்ள முடியும்.

சேலம்:

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் 'கியூட்' நுழைவுத்தேர்வு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை மேற்கொள்ள முடியும்.

அந்த வகையில் நடப்பாண்டுக்கான கியூட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் அடுத்த மாதம் (மார்ச்) 12-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வை பொறுத்தவரையில் வருகிற மே மாதம் 21-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கணினி வாயிலாக நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. கடந்த ஆண்டு இந்த தேர்வை எழுத 9 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் 45 நிமிடங்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வில், கணக்கியல், கணக்கு போன்ற கணக்கீடுகள் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான நுழைவுத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு நேரம் போதுமானதாக இல்லை என்ற புகாரும், கூடுதல் நேரம் ஒதுக்க கோரிக்கையும் எழுந்தது. அதன் அடிப்படையில், கல்விக்குழு இதுதொடர்பாக ஆலோசித்து இருப்பதாகவும், கணக்கீடுகள் சம்பந்தமான பாடங்களுக்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வுக்கு மட்டும் கூடுதல் நேரம் வழங்க தேசிய தேர்வு முகமை முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 15 முதல் 20 நிமிடங்கள் வரை கணக்கீடுகள் பாடங்களுக்கான நுழைவுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Tags:    

Similar News