உள்ளூர் செய்திகள்
குடிப்பழக்கத்திற்கு அடிமையான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
- மனநலம் பாதிக்கப்பட்டு சொந்த ஊரில் இருந்து உள்ளார்.
- ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ். இவரது மகன் குமார் (வயது28), இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டு சொந்த ஊரில் இருந்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி தேன்கனிக்கோட்டை தொட்டக்கான் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.