திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பற்றி தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- மாவட்ட மருத்துவ அலுவலர் புகார்
- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பற்றிய தவறான பொய்ப் பிரச்சாரங்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதன்மை மருத்துவ அலுவலர் குமரவேல் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்அதில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 87ஆயிரம், பறநோயாளிகள் 8700, உள்நோயாளிகளுக்கு மிக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது 7871, கர்ப்பிணி பெண்களுக்கு தமிழகத்திலேயே அதிக அளவில் பிரசவம் பார்க்கப்பட்டு உள்ளது.
மிக சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையை சிலர் வேண்டுமென்றே அரசு மருத்துவமனை பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் இங்கு ரத்தம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் ரத்தம் பெற்ற விவரம் முழுவதும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு சரிபார்க்கப்பட்டு உள்ளது.
இங்கு பொதுமக்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும் ரத்தம் சேமிக்கப்பட்டு கர்ப்பிணிகளுக்கும், அறுவை சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவசர தேவைக்கு வெளி மருத்துவமனையில் தேவைப்படுவோருக்கு பணம் செலுத்தி ரசீது வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்த அரசு மருத்துவமனைக்கு களங்கம் விளைவித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக்கொண்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெகடர் பிரேமா நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.