உள்ளூர் செய்திகள்

 திண்டிவனம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

திண்டிவனத்தில் அதிரடி: போதை பொருட்கள் கடத்தலை தடுக்க விடிய விடிய வாகன சோதனை

Published On 2022-08-11 11:34 IST   |   Update On 2022-08-11 11:34:00 IST
  • திண்டிவனத்தில் போலீசார் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க விடிய விடிய வாகன சோதனை ஈடுப்பட்டனர்.
  • விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

விழுப்புரம்:

திண்டிவனம் பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, அந்நிய மதுபானகள்,போதை மாத்திரைகள்,ஆகியவை அதிகளவில் விற்பதாக தகவலின் பெயரில் விற்பனையை தடுக்கும் வகையில் திண்டிவனம் ஏ.எஸ்.பி.அபிேஷக் குப்தா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் பெயரில் நேற்று இரவு திண்டிவனம் மரக்காணம் சாலையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காந்தி, போலீஸ்காரர்கள் செல்வம், வரதராஜ், மற்றும் போலீசார் நேற்று இரவு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான நபர்கள் ஏதேனும் கஞ்சா, மதுபானம், போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருக்கிறார்களா? என அவர்களிடமும், வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர். நேற்று இரவு திண்டிவனம் மரக்காணம் சாலையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காந்தி, போலீஸ்காரர்கள் செல்வம், வரதராஜ், மற்றும் போலீசார் நேற்று இரவு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான நபர்கள் ஏதேனும் கஞ்சா, மதுபானம், போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருக்கிறார்களா? என அவர்களிடமும், வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர்.விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News