சேலம் கொண்டலாம்பட்டியில் விபத்து மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
- தனது நண்பர் மாதேஸ்வரனுடன் பின்னால் அமர்ந்து கடந்த 13-ந் தேதி கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- திடீரென பிரேக் போட்டதால் 2 பேரும் சாலையில் தவறி விழுந்தனர்.
சேலம்:
சேலம் பொன்னம்மாப்பேட்டை தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது மகன் விக்னேஷ் (வயது 21). இவர் தனது நண்பர் மாதேஸ்வரனுடன் பின்னால் அமர்ந்து கடந்த 13-ந் தேதி கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பிரேக் போட்டதால் 2 பேரும் சாலையில் தவறி விழுந்தனர். இதில் விக்னேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மாதேஸ்வரன் லோசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விக்னேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து கொண்ட லாம்பட்டி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.