உள்ளூர் செய்திகள்
சேலம் சீலநாயக்கன்பட்டியில் விபத்து மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
- நேற்றிரவு சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே உள்ள ஏ.வி.எம். மருத்துவ மனை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
- ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
சேலம்:
சேலம் கொண்டலாம் பட்டியை அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி அம்ஷா (வயது 40), இவர் நேற்றிரவு சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே உள்ள ஏ.வி.எம். மருத்துவ மனை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள் ளத்தில் இறந்தார். தகவல் அறிந்த சீலநாயக்கன்பட்டி போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.