கணவனால் கைவிடப்பட்டு தற்கொலைக்கு முயன்றவர்: தருமபுரி அருகே தாய் வீட்டிலிருந்து மாயமான இளம்பெண்
- காதலித்து திருமணம் செய்து கொண்டு திருவண்ணாமலையில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்தார்.
- வீட்டிலேயே தங்கி சிகிச்சை எடுத்துவந்த வித்யா நேற்று முதல் திடீரென மயமாகி விட்டார்.
தருமபுரி,
தருமபுரி அருகேயுள்ள எர்ரனஹள்ளி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் பெருமாள்.இவரது மகள் வித்யா (வயது 20).இவர் நாகனம்பட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்தபோது அங்கு வேலை செய்த ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருவண்ணாமலையில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில் தருமபுரி பஸ் நிலையத்தில் வித்யாவை விட்டுவிட்டு ராஜ்குமார் தனது ஊருக்கு சென்றுவிட்டார்.
தாய் வீட்டுக்கு வந்த வித்யா தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் வீட்டிலேயே தங்கி சிகிச்சை எடுத்துவந்த வித்யா நேற்று முதல் திடீரென மயமாகி விட்டார்.
இது குறித்து அவரது தாய் மாரியாத்தா தந்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து மாயமான வித்யாவை தேடி வருகின்றனர்.