உள்ளூர் செய்திகள்

பசுமாடு திருடிய வாலிபர் கைது

Published On 2022-10-06 07:44 GMT   |   Update On 2022-10-06 07:44 GMT
  • பசுமாடு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • மர்ம நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கள்ளச்குறிச்சி: 

கள்ளச்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் தென்பெண்ணை ஆற்று மேம்பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பசுமாட்டை ஓட்டி வந்த மர்ம நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் வேலையாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் மணிகண்டன் (வயது 25) என்பதும், மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள குழந்தைஏசு நகரை சேர்ந்த ஆனந்தராஜுக்கு சொந்தமான பசு மாட்டை திருடி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பசுமாட்டை மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News