உள்ளூர் செய்திகள்
- சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 8 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை:
மணல்மேடு அருகே மன்னிப்பள்ளம் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மன்னிப்பள்ளம் மெயின்ரோடு பகுதியில் உள்ள தம்பிதுரை மகன் அருள்மொழி (வயது32) என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
உடனே அங்கு சென்ற போலீசார், சாராயம் விற்பனையில் ஈடுபட்ட அருள்மொழியை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 8 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.