உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
பெரியகுளம் அருகே குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தற்கொலை
- கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
- இந்த நிலையில் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி சினேகா(21). கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. அப்போது இருந்தே இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து தனது தாயிடம் போனில் தெரிவித்து அழுதுள்ளார். இந்த நிலையில் சினேகா வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விரைந்து பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர்.
அங்கு அவர் இறந்துகிடந்ததை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல்விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டு ள்ளது.