உள்ளூர் செய்திகள்

கடலூரில் வேலைக்கு சென்ற வாலிபர் மாயம்

Published On 2022-09-14 15:01 IST   |   Update On 2022-09-14 15:01:00 IST
  • புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
  • இவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிபுலியூர் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 19). இவர் புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக சென்றவர், மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News