உள்ளூர் செய்திகள்

கண்டமங்கலத்தில் குடிபோதையில் ரகளை வாலிபர் கைது

Published On 2023-03-27 07:28 GMT   |   Update On 2023-03-27 07:28 GMT
  • கண்டமங்கலத்தில் குடிபோதையில் ரகளை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • இது குறித்து கண்டமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (26). இவர் உள்பட 6 பேர் கண்டமங்கலத்தில் குடி போதையில் ரகளையில் ஈடுபட்டனர். கையில் உருட்டுக் கட்டையை வைத்து கொண்டு அந்த வழியாக சென்றவர்களை தாக்கினார்கள். மேலும் கடைகளை அடைக்க சொல்லியும் ரகளை செய்தனர். ரகளையில் ஈடுபட்ட கும்பல் தாக்கியதில் சங்கர் மற்றும் ஒரு வாலிபர் காயம் அடைந்தனர். இது குறித்து கண்டமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். ரகளையில் ஈடுபட்ட மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News