உள்ளூர் செய்திகள்

திருநாவலூர் அருகே வேலைக்கு போகச் சொன்னதால் இளம்பெண் தற்கொலை

Published On 2023-06-25 06:41 GMT   |   Update On 2023-06-25 06:41 GMT
  • வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
  • சந்திரலேகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் தாலுக்கா அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50). விவசாயி இவரது மகள் சந்திரலேகா (20). பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறாயே, ஏதாவது வேலை தேடி செல்லுமாறு சந்திரலேகாவிடம் அவரது தந்தை முருகன் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சந்திரலேகா வீட்டில் இருந்த எலி பேஸ்டை கடந்த 16-ந்தேதி சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தார்.

அவரை உடனடியாக மீட்ட பெற்றோர், உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சந்திரலேகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரலேகா நேற்று இரவு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News