உள்ளூர் செய்திகள்

குன்னத்தூர் அருேக தொழிலாளி திடீர் சாவு

Published On 2023-02-03 07:16 GMT   |   Update On 2023-02-03 07:16 GMT
  • நெஞ்சு வலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
  • பரிசோதித்த டாக்டர், கணேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்

குன்னத்தூர் :

குன்னத்தூர் அருகே வெள்ளரவெளி கிழக்கு வீதி, ராசு காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் ( வயது 56),தொழிலாளி.

இவர் பல நாட்களாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார். நெஞ்சு வலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தநிலையில் வீட்டு வாசலில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், கணேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News