உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் கணவரால் வெட்டப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு - கொலை வழக்காக மாற்றம்

Published On 2023-01-23 12:13 IST   |   Update On 2023-01-23 12:13:00 IST
  • சம்பவத்தன்று இரவில் ஜெயமுருகன் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார்.
  • இதில் பலத்த காயம் அடைந்த சுதந்திரகனியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் ஜெயமுருகன் ( வயது 74). தொழிலாளி. இவரது மனைவி சுதந்திரகனி (60). இவர்களுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

தகராறு

இதில் ஒரு மகனை தவிர அனைவருக்கும் திருமண மாகி தனியாக வசித்து வருகிறார்கள். ஜெய முருகனுக்கு குடிபழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவில் ஜெயமுருகன் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார். இதனை சுதந்திரகனி கண்டித்துள்ளார்.

அரிவாள் வெட்டு

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட் டுள்ளது. ஆத்திரம் அடைந்த ஜெயமுருகன் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சுதந்திரகனியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே இதுதொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமுருகனை கைது செய்தனர். பின்னர் அவர் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

பரிதாப சாவு

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதந்திரகனி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜன் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News