உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதலியை கத்தியால் குத்திய வாலிபர்

Published On 2023-02-17 09:54 GMT   |   Update On 2023-02-17 09:54 GMT
  • கணவரை பிரிந்து கடந்த 4 வருடங்களாக வசித்து வந்தார்.
  • ஆத்திரமடைந்த ருத்ரன் அங்கு சென்று ருத்ரம்மாவை கத்தியால் குத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள கொட்டையூர்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரம்மா (வயது 40).

இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் ருத்ரன் என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டு கணவரை பிரிந்து கடந்த 4 வருடங்களாக வசித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ருத்ரம்மா மனம் திருந்தி தனது கணவன் வீட்டுக்கு திரும்பிவிட்டாராம்.இதில் ஆத்திரமடைந்த ருத்ரன் அங்கு சென்று ருத்ரம்மாவை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ருத்ரம்மா கொடுத்த புகாரின் பேரில் தேன்கனி கோட்டை போலீசார் ருத்ரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News