பூச்சி மருந்து குடித்த வாலிபர் சாவு
- வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
- சிகிச்சை பலனின்றி நேற்று மாதேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே கதிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது33). இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மாணிக்கத்துக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதனால் கோபித்து கொண்டு சந்தியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் தனிமையில் தவித்த மாதேஷ் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு வர மறுத்துள்ளார். இதில் மனமுடைந்து காணப்பட்ட மாதேஷ் கடந்த 4-ந்தேதி அன்று வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாதேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.