உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி

Published On 2023-02-07 07:22 GMT   |   Update On 2023-02-07 07:22 GMT
  • தனது நண்பர்கள் ஸ்ரீநாத், நிதீஷ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
  • எதிரே வந்த மாருதி கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. .

விழுப்புரம்:

செஞ்சி அருகே உள்ள கொங்கரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சந்துரு (வயது 20) . இவர் தனது நண்பர்கள் ஸ்ரீநாத், நிதீஷ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றார். கொங்கரப்பட்டு வல்லம் இடையே சென்ற போது எதிரே வந்த மாருதி கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சந்துரு அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். மற்ற 2 பேரும் காயம் இன்றி தப்பினார்கள் .இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News