உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் பகுதியில் ஏரியில் பிணமாக கிடந்த வாலிபர்: கொலையா? போலீஸ் விசாரணை

Published On 2022-08-19 07:59 GMT   |   Update On 2022-08-19 07:59 GMT
  • கிடங்கள் ஏரி அருகே மயக்க நிலையில் கடந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர்.
  • வழக்குபதிந்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விழுப்புரம்:

திண்டிவனம் கிடங்கள் 2 பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38) இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சிறுநீர் கழிக்க சென்று விட்டு சென்றுள்ளார். மீண்டும் வெகு நேரம் ஆகியும் அவர் வராததால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிய நிலையில் கிடங்கள் ஏரி அருகே மயக்க நிலையில் கடந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குபதிந்து அவர் எப்படி இறந்தார்? ெகாலை செய்யப்பட்டாரா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News