உள்ளூர் செய்திகள்

அருள்தாஸ்.

செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2023-05-11 07:08 GMT   |   Update On 2023-05-11 07:08 GMT
  • அருள்தாஸ்( வயது 23)இவர் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். பூவுடன் சேர்த்து தழையை பறிக்க ஏரிக்கு இவருடன் 5 பேர் கொண்ட நண்பர்கள் சென்றனர்.
  • பின்னர் அதே ஏரியில் குளித்த போது நீச்சல் தெரியாததால் அருள் தாஸ் ஏரியில் மூழ்கி பலியானார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தேசூர் பாட்டை பகுதியை சேர்ந்த மின் ஊழியர் ஏசுதாஸ் மகன் அருள்தாஸ்( வயது 23)இவர் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் பூவுடன் சேர்த்து தழை கட்டுவதற்காக செஞ்சி அருகே உள்ள எட்டியதாங்கல் ஏரிக்கு அருள்தாஸ் மற்றும் அவருடன் 5 பேர் கொண்ட நண்பர்கள் சென்று தழைகளை பறித்து கொண்டு இருந்தனர்.பின்னர் அதே ஏரியில் குளித்த போது நீச்சல் தெரியாததால் அருள் தாஸ் ஏரியில்மூழ்கி பலியானார்.இது குறித்து உடனடியாக சக நண்பர்கள் செஞ்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி அருள்தாஸ் உடலை மீட்டனர்.பின்னர் இது குறித்து செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருள்தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News