உள்ளூர் செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-02-23 09:47 GMT   |   Update On 2023-02-23 09:47 GMT
  • நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றுள்ளார்.
  • நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் சதாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீதாராம் நகரை சேர்ந்தவர் சதாம் (வயது 22). இவர் தனது நண்பர்கள் ஓசூர் லேக் தெருவை சேர்ந்த கிருஷ்ணா (19), அர்ஜுன் (23) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றுள்ளார்.

வழியில் எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் சதாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.காயமடைந்த கிருஷ்ண, அர்ஜுன் ஆகியோர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து சதாமின் மனைவி நிதா கவுகர் கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News