திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் அதிகாரிகள் குழு ஆய்வு
- ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
- மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
உடுமலை :
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் திருப்பூர் மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளி கண்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
மலைவாழ் மக்களிடம், குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததோடு மலைவாழ் மக்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும், தொடர்பு ஏற்படுத்தும் வகையிலும், மலைவாழ் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, தொலைத்தொடர்பு டவர் லைன் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
மேலும் குருமலை, குழிப்பட்டி, மேல் குருமலை, மாவடப்பு உள்ளிட்ட அனைத்து மலைவாழ் மக்கள் குடியிருப்புகளிலும் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தனர்.திருமூர்த்திமலை செட்டில்மென்ட் பகுதியில் ஆய்வு செய்த போது 17வது வார்டு உறுப்பினர் வாணிஸ்வரி, குடியிருப்பு தலைவர் கோபால், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.