உள்ளூர் செய்திகள்

கூடலூா் அருகே விபத்தில் சிக்கிய டேங்கா் லாரி

Published On 2023-03-03 14:50 IST   |   Update On 2023-03-03 14:50:00 IST
  • லாரியில் இருந்து மெத்தனால் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • தீ விபத்து ஏற்படாமல் தடுத்து கசிவை அடைத்து வாகனத்தை அனுப்பி வைத்தனர்.

ஊட்டி,

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு மெத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி கூடலூா் அடுத்துள்ள கோழனிப்பாலம் பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது உரசியதால் டேங்கரில் இருந்து மெத்தனால் கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து கூடலூரில் இருந்து தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீ விபத்து ஏற்படாமல் தடுத்து கசிவை அடைத்து வாகனத்தை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

Tags:    

Similar News