உள்ளூர் செய்திகள்

காமராஜ் எம்.எல்.ஏ.

நன்னிலம் விளத்தூரில் துணைமின் நிலையம் அமைக்க வேண்டும்

Published On 2023-01-16 08:46 GMT   |   Update On 2023-01-16 08:46 GMT
  • துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை.
  • இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விளத்தூர் துணைமின் நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

திருவாரூர்:

நன்னிலம் சட்டமன்ற தொகுதி விளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு சட்டசபையில் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

நன்னிலம் சட்டமன்ற தொகுதி வலங்கைமான் ஒன்றியம் விளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான நிலத்தையும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கியுள்ளனர்.

நிலம் தேர்வு குறித்து உரிய அதிகாரிகளும் ஆய்வு செய்து விட்டனர்.

கடந்த ஆண்டு துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுவிடும் என மின்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஆனால் பணிகள் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விளத்தூர் துணைமின் நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இரா.காமராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நன்னிலம் சட்டமன்ற தொகுதி விளத்தூரில் 5.35 கோடி அளவில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

Tags:    

Similar News