உள்ளூர் செய்திகள்

மப்டியில் வீட்டுக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி செய்ய முயற்சி

Published On 2022-10-05 11:47 IST   |   Update On 2022-10-05 12:20:00 IST
  • சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேலின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையர்கள் வழிப்பறி செய்ய முயன்றனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பழனிவேல்.இவர் பணியை முடித்துவிட்டு ரத்தனகிரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

நந்தியாலம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேலின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையர்கள் வழிப்பறி செய்ய முயன்றனர்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தனது பைக்கில் உள்ள சைரனை ஆன் செய்ததால், அதன் சத்தத்தை கேட்ட கொள்ளையர்கள் தப்பியோடினர். இது குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News