உள்ளூர் செய்திகள்
10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் உயிரை மாய்த்த மாணவி
- பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததாக தெரிகிறது.
- மனமுடைந்த யோகஸ்ரீ நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள தொடு தொட்டிகோலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் யோகஸ்ரீ (வயது16). இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த யோகஸ்ரீ நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.