உள்ளூர் செய்திகள்

பழக்கடை வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-07-03 15:36 IST   |   Update On 2023-07-03 15:36:00 IST
  • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
  • சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ் தாமஸ் என்கிற நிரஞ்சன் (வயது33). பழகடை வியாபாரியான இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனமுடைந்த காணப்பட்ட நிரஞ்சன் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News