உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே ரெயில்வே ஊழியர் மோட்டார் சைக்கிள் மோதி சாவு

Published On 2022-09-11 07:19 GMT   |   Update On 2022-09-11 07:19 GMT
  • உளுந்தூர்பேட்டை அருகே ரெயில்வே ஊழியர் மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
  • கதிர்வேலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பாண்டூர் பகுதியை சேர்ந்த வர் கதிர்வேல் (வயது 65) இவர் உளுந்தூர்பேட்டை ரெயில்வே நிலையத்தில் ஊழிய ராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று கதிர்வேல் பாண்டூ ரிலிருந்து அரளி செல்லும் சாலை ஓரமாக நடந்து அந்த பகுதி யில் உள்ள தனது வயல்வெளிக்கு சென்றார். அப்போது அவ ருக்கு பின்னால் வேக மாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த கதிர்வேலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சை க்காக சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து இந்த விபத்து ஏற்படுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை போட்டு தப்பி ஓடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News