உள்ளூர் செய்திகள்

தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது

Published On 2022-10-12 14:36 IST   |   Update On 2022-10-12 14:36:00 IST
  • தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்தது
  • 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து மீட்டனர்.

அரவேணு,

கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பிக்காபதி பிரிவு, பெரகனி நெடுகுளா கிராமத்தில் குடியிருப்புகளை ஒட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் வனசரகர் செல்வகுமார் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் குட்டன், வன காவலர் ராஜேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து தேயிலை தோட்டத்தில் படுத்து கிடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து மீட்டனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.

Tags:    

Similar News