உள்ளூர் செய்திகள்
பிடிபட்ட நல்லபாம்பு.
நத்தத்தில் வீட்டில் புகுந்த நல்லபாம்பு
- வீட்டில் நல்லபாம்பு புகுந்ததை பார்த்த அவர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
- ன்னர் அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
நத்தம்:
நத்தம் அண்ணாநகரை சேர்ந்தவர் முகமது யூசுப்.(45) மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் நல்லபாம்பு புகுந்தது. இதை பார்த்த அவர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் வீட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை லாவகமாக கருவி மூலம் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.