உள்ளூர் செய்திகள்

அமைச்சர் கே.என்.நேருவிடம், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. மனு அளித்தார்.

அய்யம்பேட்டையில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும்-எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-11-10 09:32 GMT   |   Update On 2022-11-10 09:32 GMT
  • சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான மேல ரோட்டில் பொது விநியோக அங்காடி அருகில் பேருந்து நிலையம் கட்ட வேண்டும்.
  • தெருக்களின் குறுக்கே செல்லும் வாய்க்கால்களுக்கு பாலம் அமைக்க வேண்டும்.

பாபநாசம்:

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்க ல்துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் மீன், இறைச்சி மார்க்கெட் தற்போது சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

அதனை இடித்து விட்டு புதிய நவீன மீன் இறைச்சி மார்க்கெட் அதே இடத்தில் கட்டித் தர வேண்டும். நூலகம் கட்டித் தர வேண்டும். தெருக்களின் குறுக்கே செல்லும் வாய்க்கால்களுக்கு பாலம் அமைக்க வேண்டும்.

பேரூராட்சி சமுதாய கூடம் கட்டித் தர வேண்டும். கடைவீதி, தெற்கு ராஜவீதி, சன்னதி தெரு பின்புறம் கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும்.

அன்னுக்குடி வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு தூர்வார வேண்டும். தார் சாலை அமைக்க முடியாத இடங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

அய்யம்பேட்டை பேரூராட்சியில், நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான மேல ரோட்டில் பொது விநியோக அங்காடி அருகில் பேருந்து நிலையம் கட்ட வேண்டும்.

மேலும் பக்தர்களுக்கான தங்கும் விடுதி அமைக்க வேண்டும். மெலட்டூர் பேரூராட்சியில் உள்ள 9-வது வார்டு ஏர்வாடி பகுதி மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News