உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Published On 2023-06-18 07:06 GMT   |   Update On 2023-06-18 07:06 GMT
  • உளுந்தூர்பேட்டை அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
  • உளுந்தூர்பேட்டை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி:

திருநாவலூர் அருகே ஒடப்பன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது40). இவர் கள்ளத்தனமாகவும் அனுமதி பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தனிப்பிரிவு காவலர்தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் உளுந்தூர்பேட்டை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News