உள்ளூர் செய்திகள்

காரைக்கால் நெடுங்காட்டில் பொது இடத்தில் மது அருந்தி ஆபாசமாக பேசியவர் கைது

Published On 2023-06-05 07:40 GMT   |   Update On 2023-06-05 07:40 GMT
  • அன்பழகன் நேற்று முன்தினம் மாலை, பொன்பேற்றி மாரியம்மன் கோவில் செயின்ட் என்ற பொது இடத்தில் மது அருந்தி உள்ளார்.
  • சம்பவ இடத்திற்கு சென்று, பொது இடத்தில், மது அருந்தி ஆபாசமாக பேசிய அன்பழகனை கைது செய்தனர்.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த நெடுங்காடு பொன்பேற்றி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது50). இவர், நேற்று முன்தினம் மாலை, பொன்பேற்றி மாரியம்மன் கோவில் செயின்ட் என்ற பொது இடத்தில் மது அருந்தி, ஆபசமாக பேசிவந்ததாக, பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. அதன்பேரில், நெடுங்காடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பொது இடத்தில், மது அருந்தி ஆபாச மாக பேசிய அன்பழகனை கைது செய்தனர்.

Tags:    

Similar News