உள்ளூர் செய்திகள்

குரும்பூரில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

Published On 2023-08-28 08:54 GMT   |   Update On 2023-08-28 08:54 GMT
  • முத்து ,சுந்தர்ராஜ் ஆகிய இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து தங்கள் பகுதியில் குலசை முத்தாரம்மன் தசரா செட் அமைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
  • இதற்காக கடலில் தீர்த்தம் எடுப்பதற்காக 2 பேரும் நேற்று அதிகாலையில் பத்தமடையில் இருந்து திருச்செந்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

குரும்பூர்:

நெல்லை மாவட்டம் பத்தமடை அம்பேத்கர்நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்து (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (45). இவர்கள் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து தங்கள் பகுதியில் குலசை முத்தாரம்மன் தசரா செட் அமைக்க ஏற்பாடு செய்தி ருந்தனர்.

இதற்காக கடலில் தீர்த்தம் எடுப்பதற்காக 2 பேரும் நேற்று அதிகாலையில் பத்தமடையில் இருந்து திருச்செந்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். குரும்பூரில் அதிகாலை 4 மணி அளவில் டீ குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட தயாராகினர். அப்போது நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த முத்துவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் கீழே விழுந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரும்பூர் போலீசார் முத்துவின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து லாரி டிரைவர் சிவகளையை சேர்ந்த சிவலிங்கம் மகன் குமார் (33) மீது குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News