உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் பட்டாசு கடை வைக்க உரிமம் அவசியம்

Published On 2022-09-04 05:21 GMT   |   Update On 2022-09-04 05:21 GMT
  • தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
  • பொது சேவை மூலமாக வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பித்து உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி:

தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. மிக முக்கிய பண்டிகையான தீபாவளியை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

எனவே உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட உள்ளது.

எனவே நிரந்தர உரிமம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட சார் ஆட்சியர், கோட்டாட்சியர் மூலம் தங்கள் உரிமத்தினை புதுப்பிக்க வேண்டும்.

தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை செய்ய விரும்பும் ெபாதுமக்கள், வணிகர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மூலமாக வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பித்து உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News