உள்ளூர் செய்திகள்

தாய் இறந்த துக்கத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி சாவு

Published On 2023-02-19 14:17 IST   |   Update On 2023-02-19 14:17:00 IST
  • மலர்கொடி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி குழந்தைகள் இல்லாத காரணத்தால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மலர்க்கொடி பிரிந்து சென்று விட்டார்.
  • அதைத்தொடர்ந்து தனது தாய் பாஞ்சாலையுடன் வசித்து வந்துள்ளார்.

சேலம்:

சேலம் சிவதாபுரம் அருகே உள்ள லகுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை ( வயது 50). கூலித் தொழிலாளியான இவருக்கு மலர்கொடி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி குழந்தைகள் இல்லாத காரணத்தால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மலர்க்கொடி பிரிந்து சென்று விட்டார். அதைத்தொடர்ந்து தனது தாய் பாஞ்சாலையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 40 நாட்களுக்கு முன்பு பாஞ்சாலி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்த நிலையில் வீட்டிலிருந்த அண்ணாமலை நேற்று மாலை 4.45 மணி அளவில் வீட்டின் அருகில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு பாட்டிலில் பெட்ரோல் பிடித்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீயின் தாக்கத்தால் அலறி துடித்த அண்ணாமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அண்ணாமலை இன்று அதிகாலை 2.45 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News